Sunday 19th of May 2024 09:57:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
நுவரெலியாவில் சுற்றுலா விடுதியின் ஐந்தாவது மாடியிலிருந்து  தவறி விழுந்து ஒருவர் பலி!

நுவரெலியாவில் சுற்றுலா விடுதியின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!


நுவரெலியாவில் சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து ஊழியர் ஒருவர் ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த (47 வயது) இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரங்க பியதர்ஷன ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்படி சுற்றுலா விடுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த ஐந்தாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE